ஆயிரம் ரூபாய் வேதனம் எப்படி வழங்க வேண்டும் என்பது தங்களுக்கு தெரியும்- அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன!

625.500.560.350.160.300.053.800.900.160.90 45
625.500.560.350.160.300.053.800.900.160.90 45

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வேதனம் எப்படி வழங்க வேண்டும் என்பது தங்களுக்கு தெரியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று(18.11.2020) நாடாளுமன்றில் உரையாற்றிய துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் 1000ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது போலியான அறிவிப்பு என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற போதும், பெருந்தோட்ட நிறுவனங்களுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி இந்த வேதன அதிகரிப்பைபெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தங்களுக்கு தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.