நேற்றைய தினம் காவல்துறை அதிகாரிகள் 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 6 பேர் காவல்துறை அதிகாரிகள் விஷேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான காவல்துறை மற்றும் காவல்துறை விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 630 காவல்துறை அதிகாரிகளும் 203 காவல்துறை விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.