கொரோனாவால் பாதிக்கப்படும் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானம்- சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

625.500.560.350.160.300.053.800.900.160.90 5 3
625.500.560.350.160.300.053.800.900.160.90 5 3

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறைக் கைதிகளுக்கு உள்நாட்டு மருந்துகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சிறை கைதிகளுக்கு கொரோனா தொற்று விரைவில் பரவுவதைக் கருத்திற்கொண்டு, கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களுக்கு சுதேச மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்தத் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது கொரோனா தொற்றாளர் ஒக்டோபர் 03ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட போதிலும் ஒரு மாதம் சென்றுதான் சிறைச்சாலைக்குள் கொரோனா தொற்றுப் பரவியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தேசிய வைத்திய அதிகாரிகளும் இணைந்து சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை ஊழியர்களுக்கு சிகிச்சை வழங்க ஆயுர்வேத சிகிச்சை முறையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆயுர்வேத சிகிச்சை முறையை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல திட்டமிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறைச்சாலைத் துறையுடன் இணைந்து பாரம்பரிய முறையில் ஆயுர்வேத சிகிச்சைக்குத் தேவையான மூலப் பொருட்களை எதிர்காலத்தில் பயிரிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.