தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெல்லம்பிட்டி சிவில் பாதுகாப்புப் படை முகாம்!

download 2 13
download 2 13

கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக பாதிப்புற்றதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு வெல்லம்பிட்டி சிவில் பாதுகாப்புப் படை(CDF) முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முகாமின் சாரதி ஒருவர் மீரிகமவில் கொவிட்-19 தொற்றுக்காளானதாக குறித்த முகாம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து முகாமிலுள்ள மொத்தம் 67 உறுப்பினர்களும் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.