கொழும்பு தெமட்டகொட பகுதியிலிருந்து தலவாக்கலை வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று !

download 3 8
download 3 8

கொழும்பு தெமட்டகொட பகுதியில் இருந்து தலவாகலை சென்கிளயர் பகுதிக்கு வந்த தாம்பதியினரில் ஒருவருக்கு கொரோனா தொற்று (20). வெள்ளிகிழமை.உறுதி செய்யபட்டுள்ளதாக தலவாகலை -லிந்துலை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர் .

குறித்த தம்பதியினர் கொழும்பு தெமட்டகொட. பகுதியில் தலவாகலை சென்கிளயார் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு கடந்த 16ம் திகதி வருகை தந்து பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தாமல் உறவினர்களின்வீட்டில் தங்கி இருந்த வேலை பெண்ணின் கணவர் லிந்துலை லிப்பகலை தோட்டபகுதிக்கு சென்ற போது கணவர் லிப்பகலை தோட்டபகுதியில் தனிமை படுத்தபட்டுள்ளார்.

தலவாகலை சென்கிளயார் தோட்டபகுதிக்கு வந்த இருந்த பெண்ணுக்கு பி. சி. ஆர். மேற்கொள்ளபட்டபோது குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதியாகி உள்ளதோடு குறித்த 22வயது பெண் மத்தறை கம்புரு பிட்டிய தனிமைபடுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்