மாவீரர் தினம் தொடர்பான யாழ் மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு வரலாற்று முடிவு-பிரதி காவல்துறை மா அதிபர்

download 4 6
download 4 6

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை “ஒரு வரலாற்று முடிவு என்றும், தமிழீழ விடுதலை புலிகளை நினைவுகூறும் எந்த நிகழ்வுகளையும் தடுக்க நாட்டின் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும்”பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினத்திற்கு தடை விதிக்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி அன்னலிங்கம் பிரேம் சங்கர் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் குறித்த வழக்கினை பார்வையிடுவதற்காக வருகைதந்திருந்த பிரதி காவல்துறை மா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .