விபத்துக்குள்ளான நாடாளுமன்ற ஊழியர்களை அழைத்து சென்ற பேருந்து!

8a66813b45b8eefb5e8382e1e56b9459 XL 2 1
8a66813b45b8eefb5e8382e1e56b9459 XL 2 1

நாடாளுமன்ற ஊழியர்களை அழைத்து சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தியவன்னா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இடம்பெற்ற போது பேருந்தினுள் 30 – 35 நாடாளுமன்ற ஊழியர்கள் பயணித்துள்ளனர்.

அவர்களில் பலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக நாடாளுமன்ற ஊழியர்களை அழைத்துச் சென்ற பேருந்து இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இவ்வாறு ஊழியர்களை அழைத்துக் கொண்டு செல்லும் சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சாரதி மற்றும் நடத்துநர் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.