சிறைச்சாலைகளில்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

8564
8564

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 617 ஆக உயர்ந்துள்ளது.

குருவிட்ட சிறைச்சாலையில் நேற்றைய தினம் 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

குறித்த கொரோனா தொற்றாளர்களில் 13 பேர் பெண் கைதிகள் எனவும் ஏனைய இருவரும் பெண் அதிகாரிகள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 578 கைதிகள் மற்றும் 39 அதிகாரிகள் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.