விபத்தில் படுகாயமடைந்த சிறுமி பலி!

201905040032567719 A different accident in Hosur2 killed including private SECVPF
201905040032567719 A different accident in Hosur2 killed including private SECVPF

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

விபத்தில் தேத்தா தீவைச் சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகன் சனுஸிகா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தேத்தா தீவு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பணிஸ் வாங்குவதற்காக பிரதான வீதியை குறுக்கிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது சிறுமி மீது சிறிய ரக லொறி ஒன்று மோதியுள்ளது.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு (20.11.2020) சிறுமி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி களுவாஞ்சிகுடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.