நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி!

drowning hands
drowning hands

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சோகச் சம்பவம் இன்று (11.21.2020) சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஊர்காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.