22 கிலோ கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

1489arrested 1
1489arrested 1

22 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராயைச் சேர்ந்த 35 வயதுடைய அவர் இன்று சனிக்கிழமை மாலை பருத்தித்துறை தும்பளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பருத்தித்துறை காவல்துறை நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.