வடக்கில் 10 பேருக்கு கொரோனா தொற்று!

625.500.560.350.160.300.053.800.900.160.90 10 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 10 1

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீ ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி, வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 8 பேருக்கும், கிளிநொச்சியில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் 266 பேருக்கு மேற்கெள்ளப்பட்டுள்ள பீ சீ ஆர் பரிசோதனையிலேயே, அவர்கள் அடையாளங் காணப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.