கிளிநொச்சியில் உள்ள தொழில் வழங்கும் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது.
மாவட்டத்தில் உள்ள தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தின் பாதுகாப்பு
தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.