களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் நான்கு நாட்களுக்குப் பிறகு தான் வெளியிடப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், களுத்துறை மாவட்டத்தில் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் 3 அல்லது 4 நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் முடிவுகள் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மூன்று நாட்கள் தாமதமாகப் பெறப்பட்ட சோதனை முடிவுகள் இனி செல்லுபடியாகாது என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் கடந்த 24 மணி நேரத்திற்குள் வெளியிடப்பட வேண்டும் என்று என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு வெளியிடுவதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்று பரவுவதைத் திறம்படக் கட்டுப்படுத்த முடியும், மேலும் நாடு சரியான திசையில் செல்ல முடியும் என்று உதவி செயலாளர் வலியுறுத்தினார்.