நகர சபையோ அல்லது மாநகர சபையோ இல்லாத மாவட்டம், முல்லைதீவு

Mullai CI
Mullai CI

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் மாத்திரமே நகரசபையோ அல்லது மாநகர சபையோ இல்லாத மாவட்டமாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (24) நடை பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இங்கு இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளில் ஒன்றையாவது நகரசபை என்ற நிலைக்குத் தரம் உயர்த்தி தர வேண்டும் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவையும், மடு பிரதேச செயலக பிரிவையும் தனியான பிரதேச சபையாக உருவாக்குவதற்கு அரசாங்கம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்