சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 84 பேர் கைது

04 1 696x465 1
04 1 696x465 1

தற்போது 18 காவல்துறை பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 13 காவல்துறை பிரிவுகள், கம்பஹா மாவட்டத்தில் 05 காவல்துறை பிரிவுகள் மற்றும் அடுலுகம பிரதேசத்தில் 09 கிராம சேவை பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அலவத்த பிரதேசத்தில் 02 கிராம சேகவர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த பகுதிகளில் மக்கள் நடமாடுவதை குறைத்து அனுசரணை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 744 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.