தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்கள் வல்வெட்டித்துறையில்உள்ள தனது இல்லம் மற்றும் அலுவலகம் என்பன சேர்ந்த இடத்தில் சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்தார்
மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள போதிலும் மக்கள் தமது இல்லங்களில் சுடரேற்றி மாவீரர்களுக்குஅஞ்சலி செலுத்தினர்
அந்த வகையில் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் இன்று(27) மாலை6.07ற்கு சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்தார்என்பதும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை தற்போதைய அரசாங்கம் ஆட்சிஅமைத்த முதல்வருடமான கடந்த 2019 ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது