திருகோணமலை – புளியங்குளம் தேவநகரில் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் 10 வயதுடையச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
காற்றுடன் கூடிய கடும் மழையால் வீட்டின் மதில் இடிந்து விழுந்துள்ள நிலையில், அதில் சிக்குண்டிருந்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிறுவன் பலத்தக் காயங்களுக்கு உள்ளாகியிருந்ததால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.