கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!!

20201005 143418 1
20201005 143418 1

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

“அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

அவர் தனக்கு காய்ச்சல் உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் தாயாருக்கு அறிவித்துள்ளார். அதனால் தாயார் அவரை யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று அல்லைப்பிட்டியுள்ள வீட்டு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இன்று பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கும்அத்துடன், இளைஞனின் தாயார் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.