17 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!

5 3 768x432 1
5 3 768x432 1

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 346 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியேறிய நிலையில் இந்த அதிகரிப்பு ஏறபட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் 22 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 109 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.