வவுனியா ஆலயங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்று, தீபம் ஏற்றப்பட்டு ஆலய வாயில்களில் சொக்கப்பானையும் எரிக்கப்பட்டது.
அந்தவகையில் வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குரு.சர்மா தலைமையில் விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, ஆதி விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து தீபம் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, ஆலய வாயிலில் அலங்கரிக்கப்பட்ட சொக்கப்பானை எரிக்கப்பட்டு அப்பகுதி ஒளிமயமாக காட்சியளித்தது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்ட பக்தர்கள் விநாயகர் பெருமானின் அருள் வேண்டி தீபம் ஏற்றி வழிபட்டனர்.