முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டவர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவும் இரத்ததான முகாமும் நேற்று(28) முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இளைஞர் படையணி அலுவலகத்தில் இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாகநியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக இரண்டு வார காலமாக தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டு நிறைவு விழா நேற்று(28) முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இளைஞர் படையணி அலுவலகத்தில் இடம்பெற்றது .
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இளைஞர் படையணி நிலைய பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
நிறைவு விழாவினை முன்னிட்டு இரத்ததான முகாம் ஒன்றும் ஒழுங்கு படுத்தப்பட்டு இருந்தது இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் முதற்கட்டமாக தொழிலுக்காக தெரிவுசெய்யப்பட்ட தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்ட 54 பயனாளிகள் கலந்து கொண்டனர் இவர்களில் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்வதற்கு முன் வந்த பலரும் இரத்த தானத்தை வழங்கியிருந்தனர் மாவட்ட அரசாங்க அதிபர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்
இங்கு தொழில் பெற்றவர்களால் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது இவர்கள் எதிர்வரும் வாரங்களில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டு சேவைக்காக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது