பேருந்து சேவைகள் இன்று முதல் வழமைக்கு திரும்பின

இன்று முதல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வழமை போன்று பேருந்து சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இன்று முதல், தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட பகுதிகளில் பேருந்து சேவையில் ஈடுபடும் என அதன் துணை பொது மேலாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அனைத்து டிப்போக்களுக்கும் தகவல் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.