புலிகளின் தலைவருக்கு முகநூலில் வாழ்த்து தெரிவித்த 4பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!.

court order 720x450 1
court order 720x450 1

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66 வது பிறந்ததினத்தையிட்டு அவரின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றி பிறந்ததின வாழ்த்து தெரிவித்த 4 பேரையும் எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டார்

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து முகநூலில்; வெளிவந்தது தொடர்பாக புலனாய்வு பிரிவினின் தகவலுக்கமைய காவல்துறையினர் முகநூலில் தரவேற்றம் செய்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பிரகாரம் செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேரை கடந்த வியாழக்கிழமை (27) திகதி ஏறாவூர் காவல்துறையினரால் கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் 3 நாட்கள் காவல்துறை தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் மன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்