எதிர்க்கட்சியின் முதலாவது நிறைவேற்றுக் குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இதன்படி, இந்தக் கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்
கட்சியின், புதிய யாப்பை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்
இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கு, புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல், கீழ் மட்டத்திலிருந்து தமது நடவடிக்கைளை முன்னெடுத்துச் செல்லல், இணைப்புக் குழுக்களை அமைத்தல் மற்றும் தொழிற்சங்கத்தை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் புதிய யாப்புக்கான அனுமதியைப் பெற்று தமது அடுத்த கட்ட நடவடிக்களை முன்னெடுச் செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.