தற்காலிகமாக மூடப்பட்டன மொரொன்துடுவ மற்றும் மில்லேனிய காவல்துறை நிலையங்கள் !

police 2 300x173 1
police 2 300x173 1

கொரோனா தொற்று பரிசோதனையில் இரு காவல்துறை அதிகாரிகள் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக உறுதியானதையடுத்து மொரொன்துடுவ மற்றும் மில்லேனிய ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு காவல்துறை நிலையங்கள் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கடந்த 18 ஆம் திகதி கம்பஹா பகுதியில் நடத்தப்பட்டகொரோனா தொற்று பரிசோதனையில் இவ்விரு காவல்துறையினரும் நோயால் பாதிக்கப்பட்டமை தெரியவந்தது.

இதையடுத்து குறித்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் 90க்கும் மேற்பட்டகாவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.