முல்லைத்தீவை சேர்ந்த அரச ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

IMG 20201201 103521
IMG 20201201 103521

முல்லைத்தீவை சேர்ந்த அரச ஊழியர் ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையின் வவுனியா அலுவலகத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைதீவு உடையார்கட்டு பகுதியை வதிவிடமாகக்கொண்ட குறித்த நபர் விடுமுறையில் அங்கு சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை வவுனியாவில் உள்ள அவரது அரச விடுதிக்கு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் தொடர்ச்சியான வயிறுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் நோயாளர் காவுவண்டியின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளார்.