கிளிநொச்சியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையால் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று (01) அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற வாகனங்களை செலுத்தி வருகின்ற சாரதி மற்றும் உதவியாளர்கள் என அனைத்து வாகனங்களையும் மறித்து பி.சி.ஆர் பரிசோதனைகள் 67 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று பெறப்பட்டுள்ள பிசிஆர் மாதிரிகளை கிளிநொச்சி கரைச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் பி.சி.ஆர் மாதிரிகளை நாளை மறுதினம் (03) பெற்றுக்கொள்ள முடியுமென கரைச்சி பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்தியர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.