மோட்டார் சைக்கிள் திருடனை கண்டுபிடிக்க உதவுமாறு மட்டக்களப்பு காவல்துறையினர் கோரிக்கை!

vlcsnap 2020 12 01 13h20m43s317 1 1
vlcsnap 2020 12 01 13h20m43s317 1 1

மட்டக்களப்பு மாமாங்கம் ஆலய நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த எப் சட் வகை மோட்டார் சைக்கிள் ஒன்று திருடி செல்லப்பட்டு அதன உதிரிப் பாகங்கள் கழற்றப்பட்ட நிலையில் குறித்தமோட்டார் சைக்கிளின்உதிரிப்பாகம் நீரோடையில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் கடந்த 9 ம் திகதி இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்

குறித்த மோட்டர்சைகிளின் உரிமையாளர் சம்பவதினமான (9) ம் திகதி இரவு 8 மணியளவில் மோட்டர்சைக்கிளை கோவிலின் நுழைவாயில் நிறுத்திவிட்டு மழைக்கு கோவிலுக்குள் ஒதுங்கிய பின்னர் வெளியில் வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிளை காணாமல் போயிருந்தது

இதனையடுத்து இது தொடர்பாக காவல்துயினரிடம் முறைப்பாடு செய்த நிலையில் மோட்டர் சைக்கிளின் உதிரி பாகங்களை கழற்றிவிட்டு அதன் உதிரிப்பாகம்ஒன்றை சீலாமுனை பகுதியிலுள்ள நீரோடையில் வீசி எறிந்து நிலையில் அந்த உதிரிப்பகத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இதேவேளை திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்கள் கழற்றி விற்பனை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதுடன். குறித்த மோட்டார் சைக்கிளை திருடிய நபரை அடையாளம் காண முடியாத நிலையில் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளனர் . குறித்த நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0652225357 , 065 2224442 , 0714535693 , 0719155940 , 0719873173 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மட்டக்களப்பு காவல் நிலையத்திற்கு தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர.

vlcsnap 2020 12 01 13h20m43s317 1
vlcsnap 2020 12 01 13h20m43s317
vlcsnap 2020 12 01 13h20m34s288