வவுனியா கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து டெங்கினை கட்டுப்படுத்த பொது சிரமதானம்!

IMG 20201201 171636

பட்டாணிச்சூர்புளியங்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள பொது கிராம அமைப்புக்கள் ஒன்றிணைந்து டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் பொது சிரமதானம் நேற்று முதல் ஆறு நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளது .


பட்டாணிச்சூர்புளியங்குளம் கிராம அமைப்புக்களினால் நேற்று ஆரம்பமான டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்தும் சிரமதானத்தில் நகரசபை ஊழியர்கள் , சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இச் சிரமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது . 


இதற்கு பொது மக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி தமது வீடுகளிலுள்ள குப்பைகள் , கழிவுகளை அகற்றி வரும் நகரசபை வாகனத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்கி டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு கிராம அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர்