வடமாகாணத்தில் மார்ச் மாதம் முதல் இன்றுவரையான 84 பேருக்கு கொரோனா தொற்று!

1594300706 kethesh 2
1594300706 kethesh 2

வடமாகாணத்தில் மார்ச் மாதம் முதல் இன்றுவரையான காலப்பகுதியில் 84 நோயாளர்கள் கொரோனா
தொற்று நோய்க்கு உள்ளாகி உள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பார் வைத்தியர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடமாகாணத்தில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கடந்த மார்ச் மாதம் முதல்செப்ரெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 17 நோயாளர்களும் ஒக்டோபர் மாதம் 39நோயாளர்களும் நவம்பர்மாதம் 27 நோயாளர்களும் டிசம்பர் மாதம் இன்றுவரை ஒருவரும்
இனங்காணப்பட்டுள்ளனர்

நவம்பர் மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 13 பேரும் யாழ் மாவட்டத்தில் இருந்து 8 பேரும்
மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 2 பேருமாக மொத்தம் 27
பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

.வடமாகாணத்தில் பீ சீ ஆர் பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு மேலதிகமாக அவசியம்ஏற்படும்போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் உள்ள ஆய்வுகூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

வடமாகாணத்தில் உள்ள ஆய்வுகூடங்களில் ஒக்டோபர் மாதத்தில் 7124
பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் நவம்பர் மாதத்தில் 8069 Pஊசு பரிசோதனைகளும் கொழும்பு அனுராதபுரம்
ஆய்வுகூடத்தில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் 19 சிகிச்சை நிலையங்களாக மருதங்கேணி வைத்தியசாலை கோப்பாய் கல்வியற்
கல்லூரி மற்றும் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் மாகாண தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியன
இயங்கிவருகின்றன.

இதில் மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி
மாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் தற்பொழுது 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று
வருகின்றனர்எ னவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்