நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழில் 82 குடும்பங்கள் பாதிப்பு!

20201201 144410
20201201 144410

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 82 குடும்பங்களை சேர்ந்த 359 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்ப்பாண – சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

12 மணித்தியாலமாக தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 7 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுணடாய் பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சாவகச்சேரி பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-