சிறுபான்மையினருக்கு கோத்தாபய அழைப்பு!

president speach
president speach

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றியில் சிறுபான்மையினரை இந்த வெற்றியில் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொண்ட போதும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் இணைந்து செயற்படுவதற்கு புதிய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் முதலாவது உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே வெற்றிபெற்றேன். சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் என்னால் வெற்றிபெற முடியும் என்பது எனக்குத் தெரியும்.

எனது வெற்றியில் பங்கெடுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், சிவில் சமூகத்தினர் ஊடகத்துறையினருக்கும் நன்றிகள்.

எனது தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு குறிப்பிட்ட படி இலங்கையைக் கட்டியெழுப்புவேன்.

எந்தவொரு அரச அலுவலகத்திலோ எனது ஒளிப்படத்தையோ அமைச்சர்களின் ஒளிப்படத்தையோ பொருத்த வேண்டாம். தேசிய இலச்சினையை மட்டும் பொருத்துங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.