அடுத்த 24 மணித்தியாலத்தினுள் பதவி விலகும் பிரதமர்

ranil 1
ranil 1

அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வார் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷவினை சந்தித்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமா குறித்த அறிவிப்பை தெரிவிப்பார் என்றும் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.