இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாது நியமனமாக பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை அவர் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் எழுதிய, நந்திக்கடலுக்கான பாதை நூல் சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமானது.
அந்த புத்தகத்தில் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உறுதி, நடத்தையை பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.