தொடரை தக்க வைக்குமா இலங்கை?

EDhWtFnU8AAZRC9
EDhWtFnU8AAZRC9

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று கண்டி- பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு லசித் மாலிங்கவும், நியூஸிலாந்து அணிக்கு டிம் சவுத்தீயும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

எனவே, இப்போட்டியில் இரண்டு அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி நகரவுள்ளன. இப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றால், தொடரை வென்றுவிடும்.

இலங்கை அணி வெற்றிபெற்றால், தொடரை தக்கவைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியின் வெற்றி யாருக்கு?