டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
3-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கு தயாரானபோது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் க்கு காயம் ஏற்பட்டது. இதனால் டி20 தொடரில் அவர் விளையாடவில்லை.
டி20 தொடர் முடிந்த பின்னர் முதல் டெஸ்ட் 26ஆம் திகதியும், 2-வது போட்டி ஜனவரி 3ஆம் திகதியும் தொடங்குகிறது. இந்த நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.