ஐ.பி.எல் தொடரில் இணையும் புதிய அணிகள்?

large ipl 2020 1 26281
large ipl 2020 1 26281

2022 ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவதற்கு 10 அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் சபையின் பொதுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமாதாபாத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த கூட்டத்திலேயே ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் அணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 2022 ஆம் ஆண்டிலிருந்து, ஐ.பி.எல் போட்டிகளில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் இணைத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு புதிய அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், மேலும் இரண்டு புதிய அணிகள் 2022 ஆம் ஆண்டின் போட்டியில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான முயற்சிகளை இந்திய கிரிக்கெட் சபை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் சபையின் இயக்குநராக சவுரவ் கங்குலி தொடர்ந்து இருப்பதற்கு பொதுக்குழு முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.