இந்தியாவின் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி அடுத்த மாதம் 10ஆம் திகதி தொடங்குகிறது. இதில் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தத் தொடருக்கான சவுராஷ்டிரா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான உனத்கட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் சவுராஷ்டிரா அணி முதன் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.