தனஞ்சய டி சில்வா தென் ஆபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார்!

dhana
dhana

தென் ஆபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பெடுத்தாடியபோது உபாதைக்குள்ளான இலங்கை வீரர் தனஞ்சய டி சில்வா குறைந்தபட்சம் 2வாரங்களுக்கு விளையாட முடியாதுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், இத்தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்குபற்ற மாட்டார் எனவும்இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்காவின் செஞ்சூரியனில் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாளான சனிக்கிழமை தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் அவரின் தொடைப்பகுதியில் உபாதை ஏற்பட்டதால் ஆடுகளத்திலிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.