சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகின்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை இனவெறி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ச்சர் துடுப்பெடுத்தாடி விட்டு அரங்கு திரும்புகையில்
இரசிகர் ஒருவர் ஆர்ச்சரின் நிறம் குறித்து கேலி செய்துள்ளார்.
இனவெறி விவகாரத்தால் ஆர்ச்சரிடம், நியூசிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆர்ச்சர் மீதான இனவெறி சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. பலவிதமான கலாச்சாரத்தை பின்பற்றும் மக்கள் நியூசிலாந்தில் வாழ்கிறார்கள். எங்கள் மண்ணில் நடந்த இனவெறி பிரச்சினைக்காக ஆர்ச்சரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடக்காது என நம்புகிறேன்.