ஐ.பி.எல் ஏலத்திலிருந்து ஸ்டார்க் விலகல்

mitchel starc
mitchel starc

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) T20 தொடர் ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வரும் 19ம் திகதி நடைபெற உள்ளது.

ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 713 பேர் இந்தியர்கள். மீதியுள்ள 258 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இதிலிருந்து 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஐ.பி.எல் ஏலத்தில் இருந்து விலகியுள்ளார்.