இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கு புதிய தொழில்நுட்பக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அதன்படி குறித்த குழுவுக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா குறித்த குழுவுக்கு தலைமை தாங்குகின்றார்.
மேலும் ரொசான் மஹாநாம, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார ஆகியோர் இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கான தொழில்நுட்பக்குழுவில் இடம்பிடித்துள்ளனர்.