தெற்காசிய மெய்வல்லுனர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (Dec.04) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக் கொடுத்தார்.
இவர் போட்டித் தூரத்தை நிறைவுசெய்ய 30 நிமிடங்களும் 49.20 செக்கன்களை எடுத்துக் கொண்டார்.
10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான சண்முகேஸ்வரன், சர்வதேச போட்டித் தொடரொன்றில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும்.
இந்த நிலையில், இந்திய வீரர் சுரேஷ் குமார் 29 நிமி. 33.61 செக்கன்களில் தங்கப் பதக்கத்தையும், நேபாள வீரர் தீபக் அதிகாரி 30 நிமி. 50.06 செக்கன்களில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொண்டனர்.