ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க சென்னைக்கு சென்றார் தோனி!

dhonistr
dhonistr

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. போட்டிக்கான இடம், திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் முன்கூட்டியே பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி நேற்று முன்தினம் இரவு சென்னை சென்றுள்ளார்.

அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். 14 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவரான மஹேந்திர சிங் தோனி சென்னை வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

14 ஆவது ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள போதிலும், மைதான விபரங்கள் மற்றும் ஆரம்பமாகும் திகதி குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் முற்கூட்டியே பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி நேற்று இரவு சென்னை சென்றுள்ளார்.