ஐபிஎல் இல் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை!

142050
142050

நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடரில் பங்கேற்கும் எந்தவொரு அணி வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு அணிகளின் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறவுள்ள இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அவர்களில் எவருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் குறைந்தது 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்திய – இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற வீரர்கள் தனிமைப்படுத்தல் இன்றி தங்களது அணிகளில் இணைந்துக்கொள்ள முடியும் எனவும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9 ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.