சுற்றுலா இலங்கை அணிக்கும் – பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பின்டி கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இன்றைய 2ம் நாள் ஆட்டம் தொடரப்பட்டு மேலும் ஒருவிக்கட்டினை இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது,
தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களுடனும், டில்ருவான் பெரேரா ஆட்டமிழக்காது 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
நாளை போட்டியின் 3வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது,