தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
இந்த போட்டி சென்சூரியனில் (Centurion) பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரில் முன்னதாக இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டிகளில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்று 1:1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.
இந்தநிலையில், இன்று இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கட் போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானமிக்க போட்டியாக அமையவுள்ளது.