மகளிர் 20க்கு 20 செலஞ்சர்ஸ் தொடரை மீண்டும் நடத்துவதற்கு திட்டம்!

202101080630330322 Tamil News England womens cricket team to make historic trip to SECVPF 1
202101080630330322 Tamil News England womens cricket team to make historic trip to SECVPF 1

மகளிர் 20க்கு 20 செலஞ்சர்ஸ் தொடரை மீண்டும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, மூன்று அணிகளின் பங்கேற்புடன் இந்த போட்டித்தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த ஆண்டு இதனை 4 அணிகள் மோதும் தொடராக நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இந்தியாவில் மீளவும் தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் 3 அணிகளை உள்ளடக்கியதாக குறித்த தொடர் அமையவுள்ளது.

இந்தத் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகங்களிடம் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.