இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வேளை தனது ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் தனஞ்சஜ டி சில்வா ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்சில் 2 விக்கட் இழப்பிற்கு 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, பாகிஸ்தான் சார்பில் அபித் அலி 109 ஓட்டங்களையும், பாபர் அசாம் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்நிலையில் இரு அணித்தலைவர்களும் போட்டியை முடித்துக் கொள்வதாக சம்மதம் தெரிவித்ததற்கமைய போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டநாயகனாக அபித் அலி தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தொடரின் 2வது போட்டி எதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ளது.